வணக்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC தொகுதி–1 தேர்விற்கான 90 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு 28.03.2024 வெளியிடப்பட்டது. முதல்நிலைத் தேர்வு 13.07.2024 அன்று நடைபெற்றது இதனைத் தொடர்ந்து 02.09.2024 இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.மனிதநேயத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்ற மனிதநேய மாணவர்கள் மட்டுமின்றி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இதர மாணவர்களும், எமது மனிதநேய மையத்தில் முதன்மைத் தேர்விற்கான பயிற்சிக்கு பதிவு செய்தால் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.நேரடியாக வந்து பதிவு செய்ய முடியாத மாணவர்கள், எமது இணையதளமான www.mntfreeias.com-ல் பதிவு செய்து கொள்ளலாம்.முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற மனிதநேயம் மாணவர்கள் மற்றும் பிற மாணவர்கள் அனைவரும் தொலைபேசி மூலமாக 044-24358373, 24330095, 9840439393 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புக் கொள்ளலாம். இணையத்தளத்தில் www.mntfreeias.com பதிவு செய்துகொள்ளலாம்.மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் திரு. சைதை துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.பின்வரும் இணைப்பில் பதிவு செய்துகொள்ளலாம்.
Scroll to Top